கொரோனா காரணமாக 4 மாத குழந்தையொன்று மரணித்துள்ள சம்பவமொன்று பேராதனை பகுதியில் பதிவாகியுள்ளது.
கண்டி-பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 4 மாத குழந்தையொன்று திடீரென உயிரிழந்துள்ளது. இதனையடுத்து மேற்கொண்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் போது குறித்த குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்டி-நுகவெல பகுதியில் வசித்து வந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝