='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட நபர் இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் தொடர்பா?

போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட நபர் இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் தொடர்பா?


 
பொலிஸாரின் காவலில் உள்ள சந்தேகநபரொருவர், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பிற்கு நிதியுதவியளித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பாணந்துறை, கெசல்வத்தையைச் சேர்ந்த 34 அகவையைக்கொண்ட இந்த சந்தேகத்துக்குரியவர் சில மாதங்களுக்கு முன்னர் போதைப்பொருள் குற்றத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஐக்கிய அரபு இ ராச்சியத்தின் துபாயிலிருந்து அவரின் தனிப்பட்ட கணக்கில் பெரும் தொகை பணம் கிடைத்துள்ளமை தெரியவந்துள்ளது.


இதனையடுத்து அவர், இலங்கையில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு அமைப்புக்கு பணத்தின் ஒரு பகுதியை வழங்கியதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த வெளிப்படுத்தலை அடுத்து சந்தேகத்துக்குரியவர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளார். 


Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com