தேசிய அடையாள அட்டை தரவுகளை இணையமூடாக உறுதிப்படுத்தும் விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் இணக்கப்பாட்டுடன் மாத்திரமே குறித்த சேவையினை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்கள் நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் ஆகியவற்றின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு குறித்த செயற்திட்டம் பயனுள்ளதாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் இணக்கப்பாட்டுடன் மாத்திரமே குறித்த சேவையினை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிநபர் ஒருவரின் தரவுகளை உறுதிப்படுத்துவதற்கு குறித்த நடவடிக்கை பயனுள்ளதாக அமையும் என ஆட்பதிவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝