கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் சடலங்களை எரித்தல் மற்றும் புதைத்தல் தொடர்பான புதிய வழிகாட்டல் நெறிமுறைகள் குறித்து நாளை (27) இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.
அத்துடன், குறித்த வழிகாட்டல் அடுத்த வாரத்தில் வௌியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியின் கையொப்பதுடன் குறித்த வர்த்தமானி வெளியாகியிருந்ததுடன், வர்த்தமானி மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட இதுவரையான நடைமுறை உத்தரவுகள் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝