='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> முஸ்லீம் இளைஞன் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு :அடக்கமா? தகனமா? பாரிய குழப்பம் 👇

முஸ்லீம் இளைஞன் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு :அடக்கமா? தகனமா? பாரிய குழப்பம் 👇

இறுதி கிரியை நடத்துவது தொடர்பில் பாரிய குழப்பத்தில் சுகாதார பிரிவு..!

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என வர்த்தமானி வெளியாகியுள்ள நிலையில், கொரோனா தொற்றினால் முஸ்லிம் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி − இறக்குவானை நகரில் இந்த கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.


சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றில் உயிரிழப்போரின் இறுதிக் கிரியைகளை நடத்தும் வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர், இலங்கையில் முதலாவது முஸ்லிம் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.

வர்த்தமானி மாத்திரமே வெளியிடப்பட்டுள்ள நிலையில், உடலை அடக்கம் செய்யும் நடைமுறைகள் சுகாதார அமைச்சினால் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், குறித்த உடலை அடக்கம் செய்வதா? அல்லது தகனம் செய்வதா? என்பது தொடர்பில் தம்மால் தீர்மானமொன்றை எட்ட முடியாதுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றார்.

இதேவேளை, இறக்குவானையில் கொரோனா தொற்றினால் பதிவான முதலாவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com