='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> 🚨BREAKING NEWS🚨 ஜனாஸா நல்லடக்க வர்த்தமானி இன்று இரவு வெளியிடா? விபரம் 👇

🚨BREAKING NEWS🚨 ஜனாஸா நல்லடக்க வர்த்தமானி இன்று இரவு வெளியிடா? விபரம் 👇


 நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி அளித்து வர்த்தமானி அறிவிப்பு இன்று (25) வெளியிடப்படவுள்ளது. இந்த வர்த்தமானி அறிவிப்பு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் கையொப்பத்துடன் வெளியிடப்படவுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் உட்பட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.


இதன் அடிப்படையில், இந்த வர்த்தமானி அறிவிப்பு சுகாதாரத்துறையின் இறுதி பரிந்துரைக்குப் பின்னர் வழங்கப்பட உள்ளது. கொரோனா அடக்கம் செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக சுகாதாரத் துறைக்கும் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளுக்கும் இடையே இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. 

இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே கொரோனா அடக்கம் செய்ய அனுமதி வழங்க சுகாதாரத் துறை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

👇வீடியோ கீழே  இணைக்கப்பட்டுள்ளது 👇



Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com