இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை கிளிநொச்சி, இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அமைச்சரவை இதனைக் குறிப்பிட்டார்.கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை பொறுப்பேற்று, அடக்கம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரணைதீவுக்கு உடல்களை கொண்டு செல்வதற்கான அனைத்து செலவீனங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்கும் என அமைச்சரவை உறுதியளித்துள்ளார்.
உடல்களை அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை எட்டியதில், அரசாங்கம் தலையீடு செய்யவில்லை எனவும், சுகாதார தரப்பினரே அதற்கான தீர்மானத்தை எட்டியதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝