='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> பரீட்சை எழுதும் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்தால் பிரச்சினையா? 👇

பரீட்சை எழுதும் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்தால் பிரச்சினையா? 👇


கின்ணியாவில் க.பொ.த.(சா/த) பரீட்சை எழுதுகின்ற முஸ்லீம் மாணவிகளுக்கு மண்டப மேற்பார்வேயாளர்களாலும் கண்காணிப்பாளர்களாலும் பல இடையூறுகளும் அசௌகரியங்களும் ஏற்படுத்தப் படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கைப் பரப்புச் செயலாளரும்,கிண்ணியா நகர சபை உறுப்பினருமான  எம்.எம்.மஹ்தி ஊடகங்களுக்கு நேற்று(04) தெரிவித்துள்ளார். 

மேலும் கூறுகையில் கிண்ணியா வலயத்தில் உள்ள முஸ்லீம் மகளீர் கல்லூரி, அல்ஹிரா மகா வித்தியாலயம், அரபா மகா வித்தியாலயம் போன்ற பரீட்சை மண்டபங்களில் பரீட்சை எழுதும் மாணவிகளுக்கே  இவ்வாறான அசௌகரியங்கள் ஏற்படுத்தப்  பட்டுள்ளதாக தனக்கு மாணவிகளால் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது என நகரசபை உறுப்பினர் கூறினார். 

பரீட்சார்த்திகளின் காதுகள் தெரிய வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஹிஜாபை அகற்றி விட்டு பரீட்சையை எழுதுமாறு அழுத்தங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. 


இச்செயற்பாடு சிறு வயதிலிருந்து ஹிஜாபை அணிந்து பழக்கப்பட்ட மாணவிகளுக்கு பெரும் அசௌகரியத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியதோடு பரீட்சையை எழுத முடியாமல் அழுகின்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

எனவே இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் ஏற்படாதவாரு அனைத்து பரிசோதனைகளையும் பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் செய்து கொள்ளுமாறும், பாடசாலை அதிபர்கள் அதற்கான வழி காட்டல்களை முன்னரே எடுத்துக்கூறி தயார்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 


Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com