='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> ஜனாஸாக்களை இலங்கையில் அனைத்து இடங்களிலும் அடக்க தீர்மானமா?

ஜனாஸாக்களை இலங்கையில் அனைத்து இடங்களிலும் அடக்க தீர்மானமா?

கொரோனா சடலங்களை இரணைத் தீவில் அடக்கம் செய்வதற்காக எடுக்கப்பட்ட முடிவு ஒரு ஆரம்ப கட்டமாக மட்டுமே எடுக்கப்பட்டதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். 

கொரோனா சடலங்கள் தற்போது மட்டக்களப்பு, ஒட்டமாவாடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


கொரோனா சடலங்களை அனைத்து மாவட்டங்களிலும் அடக்கம் செய்ய் பொருத்தமான இடங்களை தேர்ந்தெடுக்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதனடிப்படையில், எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள இடங்களில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.


இதற்கிடையில், குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து ஜனாஸாக்களும் இன்றும் நாளையும் அடக்கம் செய்யப்படும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.


Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com